அண்ணாநகர் மத்திய வருவாய் குடியிருப்பில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு
அண்ணாநகர் மத்திய வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்ட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை: அண்ணாநகரில் மத்திய வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்ட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்காக காரணம் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சென்னை அண்ணா நகரில் அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பு தொகுதியில் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றியது.
கீழ் தளத்தில் பற்றிய தீ மள மளவென பரவிய புகை மூட்டம் அதிகரித்தது. 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. கீழ் தளத்தில் தீ பற்றியதால் உடனடியாக அணைக்கப்பட்டது. எந்தவித உயிர் சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்
புதிதாக கட்டப்பட்டு வந்த அபார்ட்மெண்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்காக காரணம் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.