சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தீ விபத்து... பற்றி எரியும் தீயால் புகைமூட்டம்
சென்னை: தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனப்பகுதியில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு ஏராளமனான வனவிலங்குகள் வசிக்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சுற்றுலா தளத்திற்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வனப்பகுதியில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காய்ந்த மரங்களில் பற்றி எரிந்த தீ அந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது.
இது பற்றி அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.