டெல்லி சிபிஐ அலுவலகத்தில்.. விஜய்யிடம் 5 மணி நேரம் துருவி துருவி விசாரணை!
டெல்லி: கரூர் துயரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள், விஜய்யிடம் 5 மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அவரிடம் விசாரணை நிறைவடைந்துவிட்டதா இல்லை, அடுத்த கட்டமாக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்ற தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.

முதலில் கரூரில் முகாமிட்டு விசாரித்த சிபிஐ அதிகாரிகள், தற்போது டெல்லியில் உள்ள தங்களது தலைமையகத்திற்கு வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், தவெக தலைவர் விஜயிடம் கடந்த ஜனவரி 12 அன்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் அவர் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய் கூட்ட நெரிசலைக் கவனிக்கவில்லையா, நிகழ்வில் ஏழு மணி நேர தாமதம் ஏன், நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, வாகனம் ஏன் முன்னோக்கி நகர்த்தப்பட்டது என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தபோதும், ஒரு சிலவற்றிற்குப் பதிலளிக்க அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிகிறது. அவரது பதில்களுக்கு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சிபிஐ அறிவுறுத்தியுள்ளதாம் .
விஜய் மீதான விசாரணை தொடரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரமாக உள்ளது. அதில் அவரது பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் காலை 11.30 மணிக்கு முதல் மாலை 4.30 மணி வரை விஜய்யிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் தற்போது அது நிறைவடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் அவர் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வருவார் என்றும் இன்றே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று 5 மணி நேரம் விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது.
-
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
விஜய் அரசியல் என்ட்ரி.. சாதிய கட்சிகளுக்கு வீழ்ச்சியா? -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications