ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு.. பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை: ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு அவர்களுக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக உள்ள ஐஜி டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சேஷாயி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சுனில் குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமார் சிங் சிறைத்துறை டிஜிபியாக நியமனம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.