சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவுடன் பேசியதாக.. அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம் - ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுடன் பேசியதாக அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க தலைமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா மீண்டும் மனதை மாற்றிக் கொண்டு அ.தி.மு.க.வை கைப்பற்ற துடித்து வருகிறார். இது தொடர்பாக அவர் அ.தி.மு.க நிர்வாகியுடன் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன.

Five more people have been expelled from the ADMK for allegedly talking to Sasikala

சசிகலாவின் திட்டத்தை முறியடித்து வரும் அ.தி.மு.க சசிகலாவுடன் ஆடியோவில் பேசியவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவுடன் பேசியது தொடர்பாக இன்று மேலும் 5 அ.தி.மு.க.வி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

இதன்பேரில் சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், (போடிநாயக்கன்பட்டி) சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சண்முகபிரியா, திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர் டி. சுந்தர்ராஜ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Five more people have been expelled from the AIADMK for allegedly talking to Sasikala. The AIADMK leadership has issued this order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X