பாதுகாப்பான இடத்திற்கு போங்க.. கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் இரு நாட்களாக நல்ல மழை பெய்கிறது.
சென்னையில் இவ்வாண்டில், இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான், ஆந்திராவின், கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணையிலிருந்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கிறது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28 முதல் தொடங்கும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்
இந்த நிலையில்தான், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.