மாணவர்களே திமுகவை நம்பாதீர்கள்.. எங்களுடன் வாருங்கள்.. 20-இல் ஆர்ப்பாட்டம் செய்வோம்- பொன்னார்
சென்னை: திமுகவுக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் நேற்று தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அங்கு ஆற்றிய உரையில் நாட்டை பாஜக குட்டிச்சுவராக்குகிறது என்றும் இந்தியாவை சீரழித்து வருகிறது. பிரிவினைவாதம் செய்ய முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.
உ.பி.யில் யோகி அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களே தர்ணா.. 100 பேர் சட்டசபையில் போராட்டம்.. ஏன்?
அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வலிமையான கட்சி
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. திமுக உள்பட பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் வந்து இணைகின்றனர். இதனால் பாஜக தமிழகத்தில் வலிமையான கட்சியாக அமையும்.
திமுக எதிர்ப்பு
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத ரீதியாக மக்களை பிரித்தவர்கள் திமுக. இதுபோன்று பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் திமுக உட்கார்ந்தது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக எதிர்ப்பதால் அவர்கள் அந்த சட்டத்தை பற்றி ஆராயவில்லை.
போராட்டம்
இலங்கை தமிழர்களை பற்றி பேச திமுகவுக்கு அருகதையில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என்பது போல் தமிழகத்தில் திணிக்கிறார்கள். தமிழை வைத்து அரசியல் செய்து வரும் கட்சி திமுகவை நம்பி மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்.
ஆர்ப்பாட்டம்
மாணவர்களே எங்களை நம்பி வாங்க. தமிழ் மண்ணில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது. அனைத்து மாவட்டத்திலும் திமுகவின் பகல் வேஷத்தை கண்டித்து வரும் 20-இல் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.