அப்பா மீது மகனுக்கு என்ன மன வருத்தம்... ஜெயக்குமார் படத்தை தவிர்க்கும் ஜெயவர்தன்
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரத்தில் தனது அப்பாவும், அமைச்சருமான ஜெயக்குமார் படத்தை முழுவதுமாக தவிர்த்துள்ளார் முன்னாள் எம்.பி.ஜெயவர்தன்.
சென்னையை பொறுத்தவரை ஆல் இன் ஆலாக இருக்கக்கூடிய ஒரே அமைச்சர் ஜெயக்குமார். இதனால் அவரது புகைப்படத்தை எந்த அதிமுக நிர்வாகியும் தவிர்க்காமல் கொடுக்கும் விளம்பரங்களில் இணைத்துக்கொள்வர். மேலும், கட்சி தொடர்பான பஞ்சாயத்துக்களை கூட அவரிடம் கொண்டு செல்வர். இந்நிலையில் அமைச்சரின் மகன் ஜெயவர்தன் தான் கொடுக்கும் விளம்பரங்களில் தனது தந்தையின் படத்தை தவிர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை மாநகர அதிமுகவில் விவாதமே நடக்கிறது.
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தினசரி நாளிதழ்களில் தங்கள் தலைவியின் புகழ்பாடும் வகையில் பக்கம் பக்காம விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். அதில் ஜெயலலிதா படத்துடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள் படம் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே ஜெயவர்தன் தனது தந்தை ஜெயக்குமார் படத்தை தவிர்த்திருப்பது அவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் மனவருத்தம் இருக்கிறதா எந்த சந்தேகத்தை உண்டாக்குகிறது. சென்னை மாநகர மேயர் வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனை முன்னிறுத்துவார் என கூறப்பட்ட நிலையில் இந்த விளம்பர விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிர் உள்ளவரை ஜெயலலிதாவின் நினைவுகளுடன் உண்மையான விசுவாசியாக இருப்பேன் என அந்த விளம்பரத்தில் ஜெயவர்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ்...? அதிமுக தலைமைக்கழகத்தில் மாஸ் காட்டிய இ.பி.எஸ்.
அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கூட ஜெயவர்தன் பின் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது.