நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே - ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
கலைஞர் வெளியிடக் கருவாச்சி காவியம் முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இனி எங்கு பெறுவோம் அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!அனைவர்க்கும் என் அழுகை இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் அவருக்கு வயது 78. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.
சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்துள்ள இவர் மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து உத்தரவிட்டவர்.
உச்சநீதிமன்ற... முன்னாள் நீதிபதி... ஏ.ஆர். லட்சுமணன்... காலமானார்!!
நீதியரசர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே! நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே!தமிழர்களின் இந்திய அடையாளம் அழிவுற்றதே! கலைஞர் வெளியிடக் கருவாச்சி காவியம் முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே! இனி எங்கு பெறுவோம் அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!அனைவர்க்கும் என் அழுகை இரங்கல் என்று பதிவித்துள்ளார்.