முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.
Recommended Video
சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945-ம் ஆண்டு பிறந்தவர். 1970களில் ராணுவத்தில் பணிபுரிந்தார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றார்.
பின்னர் 1990களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.
1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் சார்பாக திருச்சி லோக்சபா தொகுதியில் 2001-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் தலித் எழில்மலை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் எழில் கரோலின், தலித் எழில்மலையின் மகளாவார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தலித் எழில்மலை உயிர் பிரிந்தது. அவரது உடல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எழில் கரோலின்
எழில் கரோலின் தன் தந்தை மறைவு குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
என் அப்பா.... எங்களை விட்டு மறைந்தார்..... மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை எங்களை விட்டு பிரிந்தார்.... அப்பா..... அப்பா....#Condolence #RIPDalitEzhilMalai pic.twitter.com/4khkgjpB0U
— Ezhil Caroline (@CarolineEzhil) May 6, 2020
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல்:
முன்னாள் மத்திய இணையமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்திய ராணுவத்தில் சிறந்த சேவையாற்றியவர் என்ற பதக்கம் பெற்று, அரசியலுக்கு வந்து சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 6, 2020
முன்னாள் மத்திய இணையமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்திய ராணுவத்தில் சிறந்த சேவையாற்றியவர் என்ற பதக்கம் பெற்று, அரசியலுக்கு வந்து சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.
அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் மீது மிகுந்த பற்று கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தலித் எழில்மலை அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.