ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்
சென்னை: ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவின் வோல்கா நதியை பார்வையிட சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர்.
அவர்களை காப்பாற்றும் முயற்சி பலன் தரவில்லை. தற்போது மரணம் அடைந்த 4 மருத்துவ மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379
சென்னை ஸ்டீபன், தாராபுரம் முகமது ஆஷிக், திட்டக்குடி ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் மரணம் அடைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Comments
English summary
Four TN Medical students drown death in Russia's Volga River.
Story first published: Sunday, August 9, 2020, 18:02 [IST]