காந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல்.. கண்டித்து கமல் போட்ட டுவிட்
Recommended Video
சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தியின் அஸ்தியை திருடிய சில கயவர்கள் அவரை தேசதுரோகி என மத்திய பிரதேசத்தில் எழுதிய நிகழ்வுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் அஸ்தியை 150வது பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் சிலர் களவாடி சென்றுவிட்டார்கள். அதில் காந்தியின் புகைப்படத்தையும் சேதம் செய்ததுடன்,அதில் தேசத்துரோகி என்று எழுதி உள்ளார்கள். அதை கண்டிக்கும் வகையில் நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கவிதை வடிவில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து பதிவில்,
"எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே" என்று கூறியுள்ளார்.
எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
— Kamal Haasan (@ikamalhaasan) October 3, 2019
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே
கமல் எதற்காக இந்த டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார் என்பது புரியாமல் டுவிட்டர்வாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கமலின் ஆழமான தமிழ் அறிவை கண்டு மெர்சலான சிலர் இது தான் அதற்கு அர்த்தம் என்று சரியாக கண்டுபிடித்து பதிவிட்டும் வருகிறார்கள்.