ஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை!
சென்னை: தமிழ் மாநில காங்கிரசின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜி.கே.வாசன், த.மா.கா அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
அரசியல் தலைவர்கள் பலர் த.மா.காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 7ஆம் ஆண்டு பிறக்கிறது. கட்சியின் 7ம் பிறந்த நாளை அக்கட்சியினர் சிறப்புடன் கொண்டாடிவருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.க அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றினார். அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நெட்டிசன்கள் பலரும் த.மா.கா குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கட்சி மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என ஒரு சிலரும், கட்சிக்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள்தான் வருகிறதே தவிர, கட்சி வளர்ந்த மாதிரி தெரியவில்லை என மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்தனர்.
26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா
நெட்டிசன்கள் கூறியதைபோல் த.மா.கா தனிக்கட்சியாக செயல்பட்டு, கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வருகிற 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அக்கட்சி அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.