சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோட்சே ஒரு கொலைகாரன்.. தீவிரவாதி இல்லை... சொல்வது சுப்பிரமணிய சுவாமி!

Google Oneindia Tamil News

சென்னை: மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு கொலைக்காரனே தவிர தீவிரவாதி இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இந்நிலையில் கமல் பேச்சு குறித்து பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்!ராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்!

கொலைக்காரன்

கொலைக்காரன்

அவர் கூறியிருப்பதாவது, கமல் கூறியப்படி கோட்சே தீவிரவாதி இல்லை. கோட்சே ஒரு கொலைக்காரன்.

தேசத்தை அச்சுறுத்துபவர்

தேசத்தை அச்சுறுத்துபவர்

யார் தீவிரவாதி என ஐநா ஒரு வரையறை கொடுத்துள்ளது. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் தீவிரவாதி.

கோட்சே தீவிரவாதி இல்லை

கோட்சே தீவிரவாதி இல்லை

கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான். ஐநா வரையறைப்படி கோட்சே தீவிரவாதி இல்லை.

தடைவிதிக்க வேண்டும்

தடைவிதிக்க வேண்டும்

கமல்ஹாசன் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்; அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

English summary
BJP senior leader Subramaniya Swamy has said that Nathuram Godse is a Murderer not a Terrorist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X