கொரோனா போல் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை.. சென்னையில் ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரம் நெருங்குகிறது. அதாவது இன்று ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 37,736-க்கு விற்பனையானது. ஆனால் இன்று 544 ரூபாய் உயர்ந்து ரூ 38,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ 68 உயர்ந்து ரூ 4,785 க்கு விற்பனையாகிறது.
அது போல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 65.70 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு தினங்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 வரை அதிகரித்துள்ளது.
பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுகையில் இந்த ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை எட்டும் என்றனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.