ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கம், 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 70 காசு உயர்ந்து 66 ரூபாய் 70 காசு என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
தொழில்துறை தேக்கமடைந்துள்ளதால், உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்க்கிறார்கள். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.