கவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்
சென்னை: லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்காது என தெரிந்தும் பங்காளி கட்சிகள் பணத்தை வாரி இறைத்தது 'கவுரமான தோல்வி'க்குத்தானாம்.
பங்காளி கட்சிகள் தேர்தல் களத்தில் முட்டி மோதிக் கொண்டிருந்தன. பிரதான கட்சியோ ஆர்.கே.நகர் பாணியில் மிதக்கத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.
தேர்தல் முடிவுகள் தொடர்பான 'உளவு' அறிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கள நிலவரத்தை பங்காளி கட்சிகள் யூகித்தே வைத்திருந்தன. அதனால் 'கவுரமான தோல்வி' என்கிற நிலையை எட்டுவது என தீர்மானித்துவிட்டனராம்.
அதாவது டெபாசிட்டையாவது தக்க வைத்தாலே நமக்கு அது ஆகப் பெரும் வெற்றி என்பதுதான் பங்காளி கட்சி தலைமைகளின் கணக்கு. அதனாலேயே மிதக்கத்தில் இருக்கும் கட்சி மிரண்டு போகும் அளவுக்கு பங்காளிகள் பணத்தை வாரி இறைத்தனராம்.
அமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்
அதே நேரத்தில் இம்முறையும் ஆர்.கே.நகர் ரிசல்ட்தானோ என பிரதான கட்சிக்குள்ளும் பீதியை கிளப்புகிறதாம் சில கோஷ்டிகள். 'இல்லை என்றால் பரவாயில்லை.. வெச்சுகிட்டு வாரி இறைக்க யோசிச்சா உள்ளதும் போகத்தான் செய்யும்' என்றும் சாபமிடுகிறாரார்களாம் அந்த கோஷ்டியினர்.