சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குகைக்குள் மோடி தியானம் செய்வதற்கு காரணம் தெரிந்து விட்டது... கி.வீரமணி சொல்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே பிரதமர் மோடிக்கு பாஜக வெற்றி பெறாது என்று தெரிந்து விட்டது. அதனால் தான் இப்போதே தியானம் செய்யச் சென்றுவிட்டார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையோடு முடிவடைந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

Got the reason for Modis meditation in cave says K. Veeramani

கேதார்நாத்தில் உள்ள புனித குகையில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் என தகவல் வெளியாகியுள்ளது. மலை உச்சியில் உள்ள குகைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தியானம் செய்யும் குகைக்கு அருகே செல்ல ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னது சரிதான் என்று கூறிய கி. வீரமணி, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் தான் என்று பேசினார்.

அரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு... பறக்கும் படையினர் அதிரடி அரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு... பறக்கும் படையினர் அதிரடி

மேலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு எதிராக ஒரு அணி உருவாகும் எனவும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

English summary
K.Veeramani Said that Got the reason for Modi's meditation in cave
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X