என்னத்த சொல்றது.. கழன்று விழுந்த சைலென்சர்.. கையில் தூக்கி கொண்டு நின்ற கண்டக்டர் டிரைவர்!
சென்னை அருகே அரசு பஸ்ஸின் சைலன்ஸர் கழண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சென்னை: என்னத்த சொல்றது.. ஒன்னும் புரியல.. எதுவும் சொல்றதுக்கு இல்லை.. நடுரோட்டிலேயே கழண்டு விழுந்துவிட்டதை பார்த்து பதறி கொண்டு ஓடினார்கள் மக்கள்!
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்திருக்கிறது. அதில் வழக்கம்போல் பயணிகள் நிறைந்து வழிந்துள்ளனர்.
பஸ் நடுரோட்டில் செல்லும்போது, அதன் சைலன்ஸர் நடுவழியில் கழண்டு விழுந்துவிட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பதறி உள்ளனர்.
உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதனால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த காட்சியை அந்த வழியாக ஆட்டோவில் செல்லும் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில் பேசுபவர் சொல்கிறார், "பார்த்தீங்களா.. இதுதான் நம்ம அரசு பஸ்ஸோட நிலைமை.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. இங்க பாருங்க.. விழுந்து கிடந்த சைலன்சரை டிரைவரும், கண்டக்டரும் தூக்கி வச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க. பாசன்ஞர் எல்லாம் இறங்கிட்டாங்க.. பின்னாடி எவ்ளோ டிராபிக் ஜாம் பாருங்க" என்று புலம்பியவாறே ஆட்டோவில் செல்கிறார்.
போனமாசம் இப்படித்தான் தாராபுரத்தில் ஒரு அரசு பஸ்ஸின் பின்புறம் 4 டயர்களுக்கு பதிலாக 2 டயர்களுடன் ஓடிய வீடியோ வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது சைலன்ஸரே விழுந்துவிட்டதாம்!