1000 பேரில் 100 பேருக்கு மட்டும் நிவாரணமா.. டிஆர்பி ராஜா கடும் பாய்ச்சல்
Recommended Video
சென்னை: பாதிக்கப்பட்டுள்ள அத்தனை பேருக்கும் நிவாரணம் தராமல் 100 பேருக்கு மட்டும் நிவாரணம் தருவதா என்று திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா கேட்டுள்ளார்.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை, சூறையாடி உள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடங்கி உள்ளன. அந்த வகையில், திமுக சட்டமன்ற உறுப்பினர், டிஆர்பி ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
டெல்டா மக்களை நேரில் சந்திக்க தைரியமில்லாத இவர் (முதல்வர்) டோக்கன் மூலமாக முகத்தை காட்ட நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ! என்று கேள்வி எழுப்பி உள்ளார் ராஜா. 1264 கார்டுகள் இருக்கும் ஊராட்சிக்கு 120 நபர்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கும் டோக்கன் கொடுப்பது எப்படி நியாயமாகும் ! என்றும் டிஆர்பி ராஜா கேட்டுள்ளார்.
#கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள #டெல்டா மக்களை நேரில் சந்திக்க தைரியமில்லாத இவர் டோக்கன் மூலமாக முகத்தை காட்ட நினைப்பது எந்த விதத்தில் நியாயம் !
— T R B Rajaa (@TRBRajaa) November 20, 2018
1264 கார்டுகள் இருக்கும் ஊராட்சிக்கு 120 நபர்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கும் டோக்கன் கொடுப்பது எப்படி நியாயமாகும் !#மன்னார்குடி pic.twitter.com/MsV8xWORJ4
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன மழை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.