குமுறடப்பற.. குமுறடப்பற.. பாட்டிகளை இப்படி மாத்திட்டீங்களே பேராண்டிகளா!
Recommended Video
சென்னை: அந்தக் காலத்துப் பாட்டிகள் டான் டான் என்று கதை சொல்வார்கள்.. எப்போது கேட்டாலும்.. ஆனால் இப்போதைய பாட்டிகள் டிக் டாக் செய்து கலக்குகிறார்கள். காரணம் நம்ம பேரப் பிள்ளைகள்தான்.
இது டிக் டாக் காலம். பல்லு விளக்குறோமோ இல்லையோ ஏதாவது டிக் டாக் செய்ய வேண்டும்.. அல்லது டிக் டாக் வீடியோவாவது பார்த்து விட வேண்டும் என்ற போதையில் இளைஞர் பட்டாளம் மட்டுமல்லாமல் எல்லோருமே அலை பாய்ந்து கொண்டுள்ளோம்.
முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு பாட்டிகள் இருப்பார்கள். கதை சொல்லுங்க பாட்டி என்று பேரப் பிள்ளைகள் பிய்த்தெடுப்பார்கள்.. அவர்களும் பேரக்குழந்தைகளை மடியில் போட்டுக் கொண்டு ஏதாவது கதை சொல்வார்கள்.. பொழுதும் போகும்.. அறிவும் வளரும். ஆனால் இன்று பாட்டிகளை டிக்டாக் செய்யச் சொல்லி அனத்தி எடுக்கிறார்கள் பேரப் பிள்ளைகள். அதைத்தான் இந்த ஆசிரியர் தனது ட்வீட்டில் போட்டுள்ளார்.
பாட்டிகளிடம் கதை சொல்ல வேண்டி நச்சரித்த பேரன்,பேத்திகள் இப்பொழுது டிக்டாக் செய்யச்சொல்லி நச்சரிக்கிறார்கள் 😑 pic.twitter.com/jG08DOlSBI
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) October 9, 2019
ஆசிரியர் செல்வம் சொல்வதும் சரிதான். காலம் வேகமாகத்தான் மாறிப் போய் விட்டது. பேரப் பிள்ளைகளை பாட்டிகளும், தாத்தாக்களும் வசீகரித்த காலம் போய், இப்போது தங்களுக்கேற்றார் போல அவர்களை வளைத்து விட்டனர் இளைய சமுதாயத்தினர்.. எப்படியோ எல்லோரும் நல்லாருந்தா சரித்தான்!