வரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று குண்டுராவ் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், இந்திராகாந்தி நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் குண்டுராவ், "மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகிறார்கள்.. மத்தியில் பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்.. பாஜகவை ஆதரிக்காதவர்கள் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அரசியல் கட்சிகள் மதத்தின் அடிப்படையில் இருக்க கூடாது.. மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களுக்காக செயல்பட வேண்டும்.. இன்னும் 6 மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சியை மீண்டும் கொண்டு வர பாடுபடுவோம்' என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வரும் தேர்தலில் தொடரும்... இந்த கூட்டணிதான் தற்போது நீடித்து கொண்டிருக்கிறது... இதே கூட்டணிதான் வரும் தேர்தலில் தேர்தலை சந்திக்கும். கூட்டணியில் எந்த பிரச்சனையுமில்லை" என்று நம்பிக்கையுடன் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
வாயை கொடுத்து மாட்டி கொண்ட அண்ணாமலை.. "நிரூபிங்க.. 1 கோடி தர்றோம்".. விவசாயிகள் அதிரடி சவால்!