உற்சாகத்தில் புல்லரித்துப் போய்.. ரஜினியை ரஞ்சனியாக்கி.. மறுபடியும் ரஜினியாக்கிய குருமூர்த்தி!
Recommended Video
சென்னை: பெரியார் குறித்த கருத்து ரஜினி அளித்த விளக்கத்தால் மகிழ்ச்சி அடைந்த குருமூர்த்தி ரஜினியை ரஞ்சனியாக்கிவிட்டு பின்னர் தவறை திருத்தி மீண்டும் ரஜினியாக்கினார்.
ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் 1971-ஆம் ஆண்டு நடந்த சேலம் பேரணி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தவறான கருத்தை கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரிஸ்ட்டுகளும் திராவிடர் கழகத்தினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில் 1971-இல் வெளியான அவுட் லுக் பத்திரிகை செய்தியை வைத்து கொண்டு நான் பேசியது கற்பனை இல்லை. உண்மைதான்.
போற போக்கில் அவுட்லுக்கை "இந்து" குரூப்பில் இணைத்து விட்டுப் போன ரஜினிகாந்த்!!
வருத்தம்
இதற்காக நான் யாரிடமும் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்றார் ரஜினி. இவரது இந்த கருத்து பெரியார் மறுப்பு சித்தாந்தத்தை ரஜினி கடைப்பிடிக்கிறார் என நிபுணர்கள் கருதினர். ரஜினியின் பதிலால் பாஜகவினர் குஷி அடைந்துவிட்டனர்.
தமிழகம்
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ரஜினியின் இன்டர்வியூ நடந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்.
தமிழகம்
ரஞ்சனியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்தவேண்டும் என்றார்.
ரஜினியாக்கினார்
ரஜினியின் பதிலடியால் பூரித்து போன குருமூர்த்தி முதலில் ரஜினியை ரஞ்சனியாக்கிவிட்டு பின்னர் அந்த பிழையை சரி செய்து மற்றொரு ட்வீட் அனுப்பினார்.