இது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜா
சென்னை: தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்திருந்தார். தமிழகத்தில் இரு மொழி கொள்கையே அமலில் இருக்கும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம்.
இவ்வாறு எச். ராஜா கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை.. பொன்னார் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.. அமைச்சர் பொக்ரியால் தமிழில் டிவிட்!