சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    ப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி-வீடியோ

    சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    இது யாருக்கு திருப்தியை கொடுத்துள்ளதோ இல்லையோ, பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா செம குஷி மூடில் உள்ளார். ஒரு பக்கம் சிதம்பரத்தை சாடியும், மறுபக்கம், சிதம்பரம் பற்றி, இதுவரை சொல்லப்படாத தகவல்களை சொல்லியும் டிவிட்டரில் ராஜா பிஸியாக இருக்கிறார்.

    H.Raja slams P Chidambaram over his arrest

    அப்படித்தான் இன்று காலை ராஜா வெளியிட்ட இந்த ட்வீட்டை பாருங்களேன்,

    திரு.சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி. 1991ல் கண்டணூரில் எனது தகப்பனாரின் மாணவர் திரு.ராமசாமி அம்பலம் அவர்கள் ஊர் முழுவதும் தாமரை வரைந்து பாஜகவிற்கு வாக்களிக்க சுவர் விளம்பரம் செய்திருந்தார். என் ஊரில் பாஜகவா என்று கூறி அவரை அழைத்து மிரட்டி அனைத்தையும் அழிக்கச் சொன்னவர் இவர். இப்படி சொல்லியுள்ளார் எச்.ராஜா.

    மற்றொரு ட்வீட்டில்,

    ஏழைகள் பணத்தை உண்டு களித்தவர்கள் களி உண்பார்கள்... இப்படி ரைமிங்காக கிண்டல் செய்துள்ளார் ராஜா.

    முன்னதாக, நேற்று இரவு வெளியிட்ட ட்வீட்டில்,

    இறுதியாக ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது. கடந்த 15 மாதங்களாக 25 தடவை முன் ஜாமீன் பெற்று கைதிலிருந்து தப்பிய சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றம் இவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று கூறியதன் அடிப்படையில் இன்று சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதில் எங்கே அரசியல் பழிவாங்கல் வந்தது. இப்படியும் சொல்லியுள்ளார் எச்.ராஜா.

    English summary
    To whom it has given satisfaction, one of the BJP's national general secretaries, H. Raja in Shema Khushi, Mood. Raja is busy on Twitter, taking Chidambaram on the one hand, he is bussy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X