10 ஆண்டு நிலுவையில் இருக்கும் வழக்கு.... அது ‘சிதம்பர ரகசியமாம்’... கலாய்க்கும் ஹெச்.ராஜா
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 'சிதம்பர'ரகசியம் என கலாய்த்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
இது தொடர்பாக தமது ட்விட்டரில் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:
நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி அவர்கள் நீதித்துறை சீர்திருத்தம் பற்றி பேசும்போது தமிழகத்தில் பிரபலமான தேர்தல் வழக்கு 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது என கூறினார்.
நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி அவர்கள் நீதித்துறை சீர்திருத்தம் பற்றி பேசும்போது தமிழகத்தில் பிரபலமான தேர்தல் வழக்கு 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது என கூறினார். என்ன வழக்கு என்பது சிதம்பர ரகசியம்
— H Raja (@HRajaBJP) August 12, 2019
என்ன வழக்கு என்பது சிதம்பர ரகசியம்.
இவ்வாறு ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் வழக்கம் போல அதிரடி பதில்களை ட்வீட்டிஸ்டுகள் கொடுத்தும் வருகின்றனர்.