இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்த தீபாவளி பரிசு.. இடைத்தேர்தல் வெற்றி பற்றி எச். ராஜா டிவிட்!
இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி, என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி, என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் விக்ரவாண்டியில் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 40547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 16551 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இது அதிமுக கட்சியை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
செம ட்விஸ்ட்.. நாங்குநேரி தொகுதியில் ஹரி நாடார் அசத்தல்.. அதிமுக, காங்கிரசுக்கு அடுத்து 3வது இடம்
கூட்டணி எப்படி
இந்த வெற்றி தற்போது அதிமுக - பாஜக கூட்டணியை பெரிய சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சி இந்த வெற்றி மூலம் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தல் வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தற்போது டிவிட் செய்துள்ளார்.
|
என்ன உணர்வு
எச். ராஜா தனது டிவிட்டில், திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக்காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன
|
திக திமுக
தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி.
|
நன்றி
இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி, என்று எச். ராஜா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.