இட்.. அது பட்.. ஆனால் வாட்.. என்ன.. இப்படி இருக்குது எச். ராஜாவின் இந்த டிவீட்டை படித்தால்!
மதிமுகவின் கணேச மூர்த்தியின் பெயர் குறித்து எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: எப்போ, என்ன, எதை பத்தி பேசறதுன்னே எச்.ராஜாவுக்கு தெரியாது போல! எதை பற்றி கவலைப்படறார் பாருங்க எச்.ராஜா?
நாட்டில எவ்ளோ பிரச்சனைகள் நடந்துட்டிருக்கு.. கூட்டணி சமாச்சாரம், தேர்தல் அமர்க்களம், பொள்ளாச்சி பயங்கரம்.. இது எல்லாத்துக்கும் மேல தினம் தினம் நம்மை கொளுத்தி எடுக்கிற வெயில்.. இப்படி நாம் இருந்தால், மதிமுகவின் கணேச மூர்த்தி பெயரை பற்றி இப்போது கவலைப்பட்டு கொண்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா!
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "படித்ததில் பிடித்தது. நாத்திக வாதம் பேசி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை உடைத்த ஈ.வெ..ரா பிறந்த ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அதே நாத்திக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் பெயர் கணேச மூர்த்தி. What an irony" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் மக்கள் டோக்கன்களை வைத்துக் கொண்டு தினகரனை தேடுகிறார்கள்... தமிழிசை பேச்சு
தந்தை பெரியார்
ஆக கடைசியில் அங்கே, இங்கே என சுத்தி திரும்பவும் பெரியார் விஷயத்துக்கே மறக்காமல் வந்துவிட்டார் எச். ராஜா! கணேசமூர்த்திக்கு எப்படியோ 70 வயதிருக்கும். 1947-ல் பிறந்த நபருக்கு வைத்த பெயர் குறித்து இப்போது கவலை எழுப்பி உள்ளார் எச்.ராஜா! அதுவும் 100 வயதை என்றைக்கோ கடந்த தந்தை பெரியாருடன் ஒப்பிட்டு!
ஈரோடு
கணேசமூர்த்தி பிறந்ததும் எப்படியும் அவரே இந்த பெயரை தனக்காக வைத்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் பெற்றோர்தான் வைத்திருக்க வேண்டும். அதேபோல, கணேசமூர்த்தி ஈரோட்டில் நேற்று பிறந்து, இன்றைக்கு அவரது பெற்றோர் பெயர் வைக்கவில்லை.
|
என்ன அவசியம்?
அதனால் பெரியாரையும், பெயரையும் சம்பந்தப்படுத்தி இன்றைய நாளில் ட்வீட் போட வேண்டிய அவசியம்தான் என்னவென்று தெரியவில்லை. அதேபோல, வைக்கப்படும் பெயரில் என்ன பெரிதாக இருந்துவிட போகிறது என்றும் புரியவில்லை.
எந்த ராஜா?
ஆனால் இந்த ட்வீட்டுக்கு கீழே, "'பெயர்' அவரவர் பெற்றோரின் அறியாமையால் வைக்கப்படுகிறது.. உதாரணம்: "ராஜா" என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ஆனால் எந்த ராஜாவை நெட்டிசன்கள் சொல்கிறார்கள்?!