சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ(ப்) "பசி"க்கு அடுத்தது.. "கார்த்தி"(க்)கை (து) தானே!.. ஆஹா.. யாரை சொல்கிறார் எச். ராஜா

கார்த்தி சிதம்பரம் குறித்து எச்.ராஜா மறைமுகமாக ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப. சிதம்பரத்தை கலாய்த்து ட்விட் போட்ட எச். ராஜா | H Raja criticized p chidambaram

    சென்னை: திடீரென்று எச்.ராஜா இரட்டை கிளவியுடன் பேச ஆரம்பித்துவிட்டார்... ஐப்பசி, கார்த்திகை தமிழ் மாதங்களை வைத்து அதற்குள் சிலேடையை புகுத்தி.. அடைமொழிகளை திணித்து.. ஆஹா..வென்று ஒரு ட்வீட் போட்டு உள்ளார். எல்லாம் ப.சிதம்பரம் பற்றின ட்வீட்தான்!

    ப.சிதம்பரம் ஜெயிலுக்கு சென்றாலும் எச்.ராஜா விடுவதில்லை.. அவருடைய பொதுவான பேச்சு "உப்பு தின்னா தண்ணி குடிக்கணும், ஊழல் செஞ்சா வழக்கை சந்திக்கணும்" இதுதான்!

    கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, ப.சி.யின் குடும்பத்தை விமர்சித்தே பிரச்சாரம் செய்தார். ஊழல் பண்ண கார்த்தி பதவிக்கு வரக்கூடாது என்று பகிரங்கமாகவே சொல்லி வந்தார். தேர்தல் ரிசல்ட் வேறு மாதிரி வந்தாலும், இறுதியில் சிதம்பரம் திகார் சென்றதே நடந்துள்ளது!

    சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- குஜராத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- குஜராத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

     ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம்

    சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றாலும், அமலாக்கத்துறை வழக்கில் காவலில் இருப்பதால் வெளியே வர முடியாத நிலை.. அதனால் ஜாமீன் கேட்டிருக்கிறார்.. இப்போது மூத்த தலைவரான ப.சிதம்பரத்துக்கு உடம்பு சரியில்லை.. அதற்குள் 4 முறை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுவிட்டார்... குரோன் எனப்படும் ‘குடல் அழற்சி' நோய் பாதிக்கப்பட்டுள்ளதாம்.. ஒன்றரை மாசத்தில் 5 கிலோ வரை எடை குறைந்து விட்டது என்கிறார்கள்!

    பாஜக தேசிய செயலாளர்

    இந்த செய்திகள் எல்லாம் தினந்தோறும் வந்த நிலையில், திரும்பவும் ப.சிதம்பரம் குடும்பத்தை இழுத்து வைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அதில், ஐ(ப்) "பசி"க்கு அடுத்தது"கார்த்தி"(க்)கை (து)தானே!.. #யாரோ #என்னமோ" என்று பதிவிட்டுள்ளார்.

     அடைமொழி

    அடைமொழி

    பல காலமாக எல்லாருக்குமே தெரியும் ஐப்பசிக்கு அடுத்து கார்த்திகை மாதம்தான் என்று! இருந்தாலும் இந்த வார்த்தைகளை பிரித்து அடைமொழியிட்டு, மேற்குறியீட்டு காட்டும்போதுதான், அர்த்தம் விளங்குகிறது. "பசி" என்றும், "கார்த்தி" என்றும் தெளிவிட்டு காட்டுகிறார் எச்.ராஜா. அதாவது சிதம்பரத்துக்கு பிறகு அவரது மகன் கார்த்தியின் கைதுதானே என்று சொல்கிறார். இவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டு, யாரோ, என்னமோ என்று பொதுவான ஒரு வார்த்தையும் பதிவிட்டுள்ளார்.

    கல்வெட்டு

    இதற்கு ஏகப்பட்ட பதிவுகளை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "இந்த வாசகத்தை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டு அதன் அருகிலேயே உட்கார்ந்துக்கங்க. பின்னாளில் வரும் சந்ததியினர் படித்து இந்த பிள்ளைக்கு இப்படி ஒரு அறிவா என்று வியந்து போவார்கள்..." என்ற பதிவிட்டுள்ளார்.

    English summary
    bjpnational secretary h raja has criticized indirectly p chidambaram and karthi chidambaram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X