அது என்ன.. வைகோவை பார்த்து எச்.ராஜா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே!
வைகோ மீதான தீர்ப்பு குறித்து எச். ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: வைகோவை பார்த்து எச்.ராஜா என்ன இப்படி பொசுக்குன்னு ஒரு வார்த்தையை சொல்லிட்டாரே என்று பார்த்தால், எச்.ராஜாவை பார்த்து நெட்டிசன்கள் பல வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டார்கள்.
ஒரு சில வருடங்களாகவே மத்திய அரசை கிழித்து எடுத்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர். எப்போது எல்லாம் மத்திய அரசை விமர்சிப்பாரோ, அப்போதெல்லாம் வைகோவை கண்டித்தும், திட்டியும் கேள்வி கேட்பார்கள் தமிழக பாஜக பிரதிநிதிகள்.
பிரதமர் மோடி விவசாயிகளை 5 நிமிஷம்கூட சந்திக்காமல் இருக்கிறார் என்று கோபத்தில், "விதவிதமாக டிரஸ் பண்ணுகிறார் என்றும், நாளுக்கு ஒரு நாடு பறக்கிறார்" என்றும் வைகோ கூறியிருந்தார்.
எச்சரிக்கை
இதற்கு வைகோ நாவை அடக்க வேண்டும் என்று எச் ராஜா எச்சரித்திருந்தார். அது மட்டுமில்லை, வைகோ ஒரு பிரிவினைவாதி.. அவரை சாகும்வரை சிறையில் தள்ள வேண்டும் என்றெல்லாம் கடந்த காலங்களில் தெரிவித்துள்ளார்.
|
குற்றவாளி
இந்நிலையில், நேற்று வைகோவுக்கு தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு தந்தது நீதிமன்றம். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எச்.ராஜா மட்டும் இந்த தீர்ப்பை வரவேற்று ட்வீட் போட்டுள்ளார்.
அதில், "வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
|
நீதிமன்றம்
அதாவது நீதிமன்றம் சரியான தீர்ப்பை தந்திருப்பதாகவே எச்.ராஜாவின் இந்த ட்வீட் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இதற்குதான் எச்.ராஜாவை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். "அது இருக்கட்டும் .... இந்த ஹைகோர்ட மயிறுன்னு சொல்லிட்டு ... தெரியாம சொல்லிட்டேன்னு மன்னிப்பு கேட்டு எம்பி க்கு நின்ன ஆளு தானே" என்கிறது ஒரு ட்வீட்.
|
தெறிக்கும் ட்வீட்
இன்னொரு ட்வீட்டோ, "ரொம்ப வெட்கமா இருந்தால் அரசியல் இருந்து விலகிருங்க ராஜா சார்.. அவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு இருக்கனும்" என்று தெறிக்கிறது.