ஆண்டாளை அவமதித்த வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும்: எச். ராஜா
சென்னை: ஆண்டாளை அவமதித்த கவிஞர் வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் வழங்குவதாக அறிவித்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விருதை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்து.
ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விழாவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்துவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கவி உலகின் பேரரசாக இருப்பவர் வைரமுத்து, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருந்தால் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை கூடியிருக்கும் என கூறியிருந்தார்.
ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும். ராஜ்நாத்சிங் அவர்களின் புனிதக் கரங்களால் விருது பெறும் தகுதி metoo குற்றச்சாட்டிற்கு ஆளானவருக்குக் கிடையாது. https://t.co/GACFgiY02F
— H Raja (@HRajaBJP) December 29, 2019
இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா அளித்துள்ள பதிலில், ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும். ராஜ்நாத்சிங் அவர்களின் புனிதக் கரங்களால் விருது பெறும் தகுதி metoo குற்றச்சாட்டிற்கு ஆளானவருக்குக் கிடையாது என கூறியுள்ளார்.