அயோத்தி தீர்ப்பு ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்- எச். ராஜா
சென்னை: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சென்னையில் வேல்முருகன், பழ. நெடுமாறன், திருமாவளவன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் போலீஸ் தடையை மீறி நடத்தப்பட்டதாக கூறி அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வழக்கு பதிந்தால் மட்டும் போதாது இம்மாதிரி கலவரம் தூண்டுவதை பிழைப்பாக கொண்ட இவர்கள் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட வேண்டும். https://t.co/1KcHGeuMe5
— H Raja (@HRajaBJP) 22 November 2019
வழக்கு பதிந்தால் மட்டும் போதாது இம்மாதிரி கலவரம் தூண்டுவதை பிழைப்பாக கொண்ட இவர்கள் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எச். ராஜா பதிவிட்டுள்ளார்.