ஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க!
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் பெரியார் குறித்த கருத்தும், அதை தொடர்ந்த பேட்டியும் பெரிய சர்ச்சையாகி உள்ளது. கடந்த வாரம் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, என்று ரஜினி குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.
பெரியார் விஷயத்தில் நான் ரஜினி பக்கம்.. நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் உதவுவேன்.. சு.சாமி கிண்டல்
என்ன பதில்
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கருத்துக்கு தற்போது குஷ்பு பதில் அளித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது .
|
என்ன தேவை
நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது, என்று குஷ்பூ தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
|
என்ன சொல்வீர்கள்
இதற்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், நீங்கள் அவருடன் நடித்தீர்கள் என்பதால் அவரின் பொய்களுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். அசிங்கமாக உள்ளது. உங்களை பற்றி, உங்கள் கலாச்சாரம் பற்றி பலர் தவறாக எழுதி இருக்கிறார்கள். ரஜினி உங்களை பற்றி ஒரு சிறிய பேப்பரை வைத்துக் கொண்டு தவறாக பேசுவார், அப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று பார்க்கலாம், என்று இவர் கேட்டுள்ளார்.
|
குஷ்பு எப்படி
இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, இப்படி உடனே முடிவிற்கு வந்த உங்களை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது. நான் சொன்னதை நன்றாக படியுங்கள். சரியோ, தவறோ என்று சொல்லி இருக்கிறேன். அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது போல. நான் அவருடன் 28 வருடம் முன் நடித்தேன். அது இப்போது விஷயம் இல்லை. உங்களின் மனம் அழுகிவிட்டது, அதுதான் பிரச்சனை, என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.