எம்பி கனிமொழி உள்பட திமுக மகளிரணியினர் கைது... போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்!!
சென்னை: ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற திமுக மகளிரணி பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றி வருகின்றனர். எம்பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசாருக்கும், கனிமொழிக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனால் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
கனிமொழி உள்பட மகளிரணியினரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி வருகின்றனர். பேரணியை தொடர்ந்து நடத்த விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனார். போலீசார் வேனை நகர விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேரணியை தடுத்து நிறுத்தியதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, ''ஹத்ராஸ் சம்பவம் நீதி மன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை. ஹத்ராஸ் சம்பவத்தை தேர்தல் வாக்குறுதியாக எடுத்துக் கொள்வோம். நாடு முழுவதும் சீரழிந்துள்ளது; தமிழ்நாடும் சீரழிந்துள்ளது. மத்திய அரசு சொல்வதை மாநில அரசு அப்படியே கேட்டுக் கொள்கிறது''. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
ஹத்ராஸ் பாலியல் சம்பவம்... ஆளுநர் மாளிகை நோக்கி...திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி!!