பொள்ளாச்சி வன்கொடுமை.. 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பொள்ளாச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமி, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் உள்பட 3 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமை செய்த இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் எனவும், இவர்களது செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏறு்றுக் கொண்ட நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications