உயிரை காப்பாத்தீட்டீங்க.. முதல்வர் பழனிச்சாமியை நெகிழ வைத்த இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள்
Recommended Video
சென்னை: முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டதின் கீழ் இதய அறுவை சிகிக்சை செய்து கொண்ட குழந்தைகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று சந்தித்து உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால் சிறுவயதிலேயே இருதத்தில் ஏற்பாடும் கோளாறுகள் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்த குழந்தைகளின் உயிர்காக்க இருதய அறுவை சிகிக்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்படி இருதய அறுவை சிகிக்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் அந்த அளவு செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்பது ஏழை குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இயலாத காரியம்.
எனவே இதயத்தில் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதன் காரணமாக பல குழந்தைகளின் உயிர்கள் தற்போது தமிழகத்தில் காக்கப்படுகிறது.
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதளம்.. கடல்நீர் உட்புகும் ஆபத்து என எச்சரிக்கை
அண்மையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டதின் கீழ் சில குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த குழந்தைகள் சில நாள்களில் பூரண குணம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் அந்த குழந்தைகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று சந்தித்து உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.