பாத்ரூமில் யார் பாருங்க..உடம்பெல்லாம் அழுத்தி தேய்க்கும் பெண்.. ஆமா, அதென்ன கருப்பா.. நெளியும் "தலை"
கருநாகங்களை ஒரு பெண் பாத்ரூமில் குளிக்க வைக்கும் வீடியோ ஷேர் ஆகிறது
சென்னை: கருநாகபாம்புகள் பாத்ரூமில் குவியலாக கிடக்கின்றன.. பக்கத்திலேயே ஒரு பெண்ணும் உள்ளார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. இதுக்கு காரணமே அந்த பாம்புகளின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பீதியும்தான்.
அதிலும், ராஜநாகம் போன்ற கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என்றால் சொல்லவே தேவை இல்லை.. தூரமாக பார்த்தாலே, தலைதெறித்து ஓடிவிடுவார்கள்..
கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு-மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!
ராஜநாகம்
ஆனால், ஒரு நபர் ராஜநாகத்துடன் நெருக்கமாக பழகி, அதனுடன் விளையாடி வருகிறார்.. இவர் இந்த ராஜநாகத்தை தினமும் குளிக்க வைக்கிறார்.. இந்த குளிக்க வைக்கும் வீடியோ ஒருமுறை இணையத்திலும் வெளியானது.. பக்கெட் நிறைய தண்ணீரை நிரம்புகிறார்.. அந்த பாம்பும் அருகிலேயே, அவரையே பார்த்து கொண்டு நின்றுகொண்டிருக்கிறது.. பக்கெட் நீரை எடுத்து, நின்றுகொண்டிற்கும் ராஜநாக பாம்பின் தலையில் ஊற்றி குளிப்பாட்டுகிறார்... அவர் பெயர் வாவா சுரேஷ்.. இவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர்.. குறிப்பாக பாம்பு நிபுணரும்கூட...
கருநாகம்
மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் இதுபோன்ற பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டுவிடும் வேலையை பார்த்து வருகிறாராம் அந்த இளைஞர். ஒரே ஒரு கருநாக பாம்புவை குளிக்க வைக்கும் இந்த வீடியோவை பார்ப்போரை நடுநடுங்க செய்துவிட்டது.. ஆனால், ஒரு பெண், தன்னுடைய பாத்ரூமில், ஏகப்பட்ட பாம்புகளை குளிக்க வைக்கிறார்.. அதுவும் அந்த பாம்புகளுக்கு சோப்பு சோப்பு குளிக்க வைக்கிறார். இந்த பாம்புகள் எல்லாம் கருநாகங்கள்..
பாத்ரூமில் பாம்பு
தண்ணீரை கருநாகப் பாம்புகள் மீது ஊற்றுகிறார்.. பிறகு, குழாயிலிருந்து ஓஸ் பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சி பாம்புகளை குளிக்க வைக்கிறார்.. ஒவ்வொரு பாம்புகளின் மேலுள்ள அழுக்குகளையும் கையால் தேய்த்து விடுகிறார்.. எப்படியும் கிட்டத்தட்ட 50 பாம்புகள் இருக்கும்.. எல்லாமே பாத்ரூமில் ஒரே இடத்தில் அமைதியாக நெளிந்து கொண்டிருக்கின்றன.. நடுநடுவே அந்த பாம்புகளை கொஞ்சி கொள்கிறார்.. அப்படியே பிரஷ் வைத்து பாத்ரூம் தரையை சுத்தமும் செய்கிறார்..
த்ரில் + செம்ம
இந்த பெண் குளிக்க வைத்து முடிக்கும்வரை, கப்சிப் என்று சமத்தாக நாகப்பாம்புகள் நின்று கொண்டிருக்கின்றன.. இந்த வீடியோ 42 வினாடி ஓடுகிறது.. பார்க்கவே த்ரில்லாக உள்ளது.. "ஏம்மா.. அதெல்லாம் நாகப்பாம்புகள், கருநாகங்கள்.. கொஞ்சமாவது பயப்படுவது போல நடி.. பாம்புக்குன்னு ஒரு மரியாதை தர வேணாமா" என்று பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.