சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே இந்த 3 மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக இருக்கும்... வானிலை மையம் வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது.

Heavy heat wave will be there in Chennai, Kancheepuram and Thiruvallur

நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இன்றும் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாடுதான்.. அங்கே வெளியே வரமுடியாத அளவுக்கு பனி.. இங்கே வெளியே வர முடியாத அளவுக்கு வெயில்! ஒரே நாடுதான்.. அங்கே வெளியே வரமுடியாத அளவுக்கு பனி.. இங்கே வெளியே வர முடியாத அளவுக்கு வெயில்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் வெப்பத்தோடு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, சேலம் 105 டிகிரி, பாளையங்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், கரூர், சென்னை ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது.

English summary
Heavy heat wave will be there in Chennai, Kancheepuram and Thiruvallur said Chennai Meteorological center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X