அப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்!
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. அதிலும் சென்னையில் மிக மோசமான வானிலை நிலவி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்ட வருகிறது. முக்கியமாக ஆம்பன் புயல் தோன்றி கரையை கடந்ததில் இருந்தே வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. ஆம்பன் புயல் விட்டுச்சென்ற காற்று காரணமாக இந்த வெப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வடக்கு மாநிலங்களில் இருந்து வெப்பநிலை வருகிறது. முக்கியமாக தமிழகத்திற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து வெப்பநிலை வருகிறது.
தென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்
சென்னை நிலை
இன்று சென்னையில் பல இடங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நீடித்தது. முக்கியமாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் நிமிடத்திற்கு நிமிடம் வெப்ப காற்று அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் வெப்ப காற்று சென்னையில் அதிகமாக வீசி வருகிறது.
அடுத்த இரண்டு நாட்கள் எப்படி
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கும் அனல் காற்றுடன், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்ப காற்று அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் கோரிக்கை வைத்துள்ளது.
வடக்கு மாவட்டம் எப்படி
தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில்தான் அதிகமாக வெப்பநிலை இருக்கும். அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக வேலூரில் அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது.
வேலூர் நிலை
வேலூரில் நேற்றும் நேற்று முதல் நாளும் 42 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்றும் அதே அளவு வெப்பநிலை வேலூரில் நிலவும் என்று கூறுகிறார்கள். அதேபோல் திருத்தணியில் இரண்டு நாட்களாக 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று அந்த வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தொட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.