சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருக்கு.. இன்றும் நாளையும் மழை இருக்கு.. மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி வீசுமாம்.. ஹேப்பி நியூஸ்

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. சில மாவட்டங்களில் வெயிலின் கடுமை குறைவாக தென்படுகிறது.

 heavy rain for next 48 hours in south tamilnadu, says meteorological department

தற்போது மீண்டும் தென் தமிழகத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாளைக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மற்றொரு அறிவிப்பில், "ஜூலை 25, அதாவது இன்றைய தினம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோவையில்.. யார்னே தெரியலை.. ராத்திரி ஆயிருச்சுன்னா.. அரை நிர்வாண கோலத்தில்.. யார் அந்த மூவர்? கோவையில்.. யார்னே தெரியலை.. ராத்திரி ஆயிருச்சுன்னா.. அரை நிர்வாண கோலத்தில்.. யார் அந்த மூவர்?

ஜூலை 26 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 27 மற்றும் ஜூலை 28 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 29 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

அதனால் இந்த 3 நாட்களும் சூறாவளி வீசபோவதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
rain in tamilnadu next 48 hours, says meteorological department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X