இதெல்லாம் டீசர்தான்.. அந்த 12 மணி நேரங்கள்தான் மிக முக்கியம்.. நிவர் வருவதற்கு முன்.. என்ன நடக்கும்?
சென்னை: நிவர் புயல் தமிழகத்தை முழுமையாக தாக்குவதற்கு 10 -12 மணி நேரங்களுக்கு முன்பே கடுமையான மழை பெய்யும். இந்த மழைக்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருந்த நிவர் புயல், தாழ்வு மண்டலமாக மாறி தற்போது முழுமையான புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
நாளை இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. மஹாபலிபுரத்திற்கும் - காரைக்காலுக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Cyclone Nivar: சென்னை அருகே நிவர் புயல் ! இப்போது எவ்வளவு தூரம்? எவ்வளவு வேகத்தில் வருகிறது?
எப்படி
இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்றாலும் கூட.. இன்றே மழை தொடங்கிவிட்டது. அடுத்த 12 மணி நேரங்கள் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது.
எங்கு மழை
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மழை பிச்சு எடுத்துக் கொண்டு இருக்கிறது. நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை பெய்தது. நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட துவங்கி உள்ளது.
சென்னை நிலை
அடுத்த 12 மணி நேரங்களுக்கு இப்படித்தான் கனமழை பெய்யும். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பெய்யும் மழை புயலுக்கு பின்பான மழையாகும். இந்த மழை புயல் காரணமாக ஏற்படுகிறது என்பதை விட.. காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வு காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்தமாக வலுப்பெற்று புயலாக மாறும்.
சுற்றி
அப்போது அந்த தாழ்வு மண்டலத்தை சுற்றி தாழ்வு பகுதிகள் அங்கங்கே சில உதிரிகள் போல இருக்கும். இது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் நகர்வு காரணமாகவே தற்போது சென்னையில் மழை பெய்கிறது.இதற்கே இவ்வளவு மழை என்றால் மொத்தமாக புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்தால் எவ்வளவு மழை பெய்யுமென்று நினைத்து பாருங்கள்.
எத்தனை
மொத்தமாக புயல் நெருங்கும் போது மழை இன்னும் தீவிரம் அடையும். அடுத்த 10-12 நேரங்கள் சென்னையில் இதன் காரணமாக மழை பெய்யும். அதன்பின் புயலின் வருகையால் மழை பெய்யும். பின் புயல் சென்ற பின் மீண்டும் மழை பெய்யும். இதனால் சென்னை இந்த முறை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.