சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை
Recommended Video
சென்னை: சென்னையில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவுகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெப்பம் நிலவி வந்தது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் வியாசர்பாடி, முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்
விடிய விடிய பெய்து வரும் மழையால் ஊரெங்கும் குளிர்ச்சி நிலவுகிறது. இந்த நிலையில் இந்த மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் கனமழை பெய்துள்ளது.
இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.