சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் காலையிலேயே பல இடங்களில் வெளுத்த கனமழை.. செம்ம என்ஜாய்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று காலையிலேயே சூப்பர் மழை பெய்தது கொரோனாவால் ஊரடங்கி கிடக்கும் வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து, குளுகுளு காற்றுடன் பெய்த மழை சென்னை வாசிகளை மகிழ வைத்துள்ளது..

Recommended Video

    காலையிலேயே சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை

    எப்போதும் ஞாயிற்றுக்கிழமை தான் சென்னை வாசிகளுக்கு சந்தோஷமான நாள். ஏனெனில் அன்று தான் விடுமுறை. விரும்பியதை சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். துரதிஷ்டவசமாக இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கே விடுமுறைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாம் இந்த பாழாய் போன கொரோனாவால் வந்த வினை.

    heavy rain in chennai Chennai Rains morning shower on sunday is blissful

    ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னை மக்கள் முழு ஊரடங்கால் முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் உதிக்கும் சூரியன் உதிக்கவில்லை. வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. உடலில் தண்ணீரை ஊற்றிவிட்டு மின்விசிறியை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கிளைமேட்..

    இந்த ஊதக்காற்று மழையாக மாறி வெளுக்கத் தொடங்கியது. சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, புழுதிவாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    heavy rain in chennai Chennai Rains morning shower on sunday is blissful

    இதேபோல் முகப்பேர், அண்ணா நகர், வடபழனி, அயனாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சாலிகிராமம், வடபழனி, மைலாப்பூர் என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வழக்கமாக காலையில் மழை பெய்தால் சென்னை வாசிகளுக்கு ஸ்பெசல் தான். ஆனால் சில நேரம் கனமழையாக வெளுத்துவிட்டால் நிச்சயம் அது நரக வேதனையாகிவிடும். வேலைக்கு செல்வதற்கு கூட சிரமத்தை உண்டாக்கிவிடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தால், அதுவும் காலையிலேயே சூப்பர்மழை பெய்தால் நிச்சயம் ரொம்பவே ஸ்பெசல் தான். வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இந்த ஜில் மழை ஆனந்த கொண்டாட்டத்தை உருவாக்கி இருக்கும்.

    இடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்புஇடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்பு

    பல வாரங்களாக ஞாயிறுகளில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்களுக்கும் இந்த மழை புது உற்சாகத்ததை தந்திருக்கும். மண்ணை மட்டுமல்ல மனிதர்களையும் இந்த மழை ஒவ்வொரு முறையும் குளிர வைக்கிறது. அந்த வகையில் இந்த மழை சென்னைவாசிகளை குளிரவைத்துள்ளது.

    English summary
    Chennai Rains morning shower on sunday is blissful, people all very happy and enjoy with rain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X