சிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுக்க தற்போது மழை பெய்து வருகிறது. முக்கியமாக வேலூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதேபோல் தற்போது டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இன்று முழுக்க இப்படி கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்கு மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
அதிகாலை 3 மணிக்கு துவங்கிய மழை தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி கிண்டி, அண்ணாசாலை, தி நகர், மேடவாக்கம், குரோம்பேட்டை, போரூர், ராயபுரம், ராமாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
இரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்!
மேலும் வடபழனி, பெசன்ட் நகர், அடையார், அண்ணா நகர் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 2 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு சாலைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.