சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்

தென் தமிழகத்தில் மழை பெய்ய போகுது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று வட மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னைக்கு நல்ல மழை பெய்தது.. இன்று தென் மாவட்டங்களுக்கு ஜாலிதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திடீரென கோடை மழை வெடித்துள்ளது. கொரோனாவைரஸ் பிடியிலும் கூடவே கடும் வெயிலிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அப்படி ஒரு புழுக்கத்தில் மக்கள் உள்ளனர்.

 heavy rain in southern tamil nadu, says weatherman

நேற்று தமிழகத்தின் வட பகுதிகளில் குறிப்பாக சென்னையில் சரியான மழை பெய்தது. வலுவான சூறைக் காற்றுடன் பெய்த மழையால் நகரமே கூலாகிப் போனது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூப்பர் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று லேட் நைட் அல்லது நாளை அதிகாலையில் சூப்பர் மழை காத்திருக்காம்.

சென்னையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முழுவதும் அவ்வப்போது சூறைக் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்காம். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பெல்ட்தான் நல்ல மழைப் பொழிவை சந்தித்துள்ளது. அதாவது 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பிற மாவட்டங்களில் மொத்தமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், வேலூர், கரூர் மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியான மழைப் பொழிவு இருந்ததாக வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
heavy rain in southern tamil nadu, says weatherman pradeep john
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X