தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சென்னை, ஈரோடு, கோபிசெட்டி பாளையம், பெரம்பலூர், கும்பகோணம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சிவங்கை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி, நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
பிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு!
சென்னையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 6 சென்டி மீட்டர் அதிகமாக பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8மணி நிலவரப்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ மழையும் பெய்துள்ளது.