தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் கனமழை அடிச்சு ஊத்துமாம்.. வானிலை மையம் தகவல்
Recommended Video
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சந்தித்தனர்,
அப்போது அவர்கள் கூறும் போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மாவட்டங்களில் கனமழை
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலும், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் பலத்தமழை
இதனிடையே வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், " 28ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
29ம் தேதி வரை கனமழை
இதேபோல் இன்று (26ம் தேதி) முதல் 29ம் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான இடங்களிலும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வானிலை மையம்
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது
கும்பகோணத்தில் நல்ல மழை
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. ஊட்டி மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது.