தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர். திருவாருர் உள்பட 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று கூறுகையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் நாளை மறு நாள் அதாவது 17ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பக்கூடும்.
நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் அதிகபட்சமாக 8 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கட்டில் 7 செ.மீ மழையும், திருச்சி மாவட்டம் லால்குடியில் 6 செ.மீ மழையும், மதுரை மாவட்டம் மேட்டுபட்டி மற்றும் திருச்சி மாவட்டம் மனங்காபுரியில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை, திண்டுக்கல், கமுதி உள்பட பல்வேறு இடங்களில் இரண்டு செமீ மழை பெய்துள்ளது" இவ்வாறு கூறினர்.