சென்னையில் மீண்டும் கனமழை.. தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளுத்தெடுக்கும் மழை
Recommended Video
சென்னை: தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளதை காட்டுவதாக வானிலை ஆய்வு மையங்கள் கூறின.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு.. வாலாஜாபாத்- சுங்கவார்சத்திரம் சாலை துண்டிப்பு
படிப்படியாக குறையும்
அதன்படி தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் விடுத்தது. மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என கூறியிருந்தது.
விடுமுறை
நேற்று இரவு முதல் அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், கடலூர், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை
சென்னையில் நேற்று முதல் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இயல்பு வாழ்க்கை
ஏற்கெனவே தாம்பரம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், வந்தவாசி பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.