தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு அதிகாரி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்றார்.
உறுதி அளித்த தலைவர்கள்.. ஜம்முவில் 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு
புதன்கிழமை காலை நிலவரப்படி ஓசூரில் 70 மில்லிமீட்டரும், மேட்டுப்பாளையம் மற்றும் சின்னக்கல்லாரில் தலா 50 மில்லி மீட்டர் மழையும், நிலக்கோட்டையில் 40 மில்லி மீட்டர் மழையும், ஊட்டி, அரவக்குறிச்சி மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.